Skip to main content

அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவு...ஆதங்கத்தில் விவசாயிகள்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Arbitrary decision of the authorities...! - Farmers in panic!

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 26ஆம் தேதி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார்கள். அப்போது கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் தலைவர் காசியண்ணன் தலைமையில் வந்த விவசாயிகள் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர் கூறும்போது, தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அது இன்று 25 ந் தேதி முதல் முறை வைத்து நீர் வழங்க முடிசெய்யப் பட்டுள்ளதாக அறிகிறோம். பாசன விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பவானிசாகர் அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையிலும் மேல் பகுதியிலேயே நெல் நடவு வேலைகள் முடிவு பெறாத நிலையிலும் முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். இதை கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சார்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக முறை வைத்து நீர் வழங்குவதை அமல் படுத்தாமல் எல்லா மதகுகளுக்கும் உரிய நீரை முழுமையாக வழங்கி விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றனர்.

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் பட்டின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக் கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷம் எழுப்பியவாறு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், கோஷம் போடாமல் உங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியரிடம் கொடுங்கள் என்றனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர். 

 

இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்குகோம்பை, அரசூர், தட்டாம்புதூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், அருணாச்சலம் உள்பட 12 பேர் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது; “அரசூர் ராஜவீதியில் குடியிருக்கும் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் நாங்கள் பல தவணைகளாக 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நபர் எலச்சீட்டு பணத்தை எங்களுக்கு தராமல் காலம் தழ்த்தி வருகிறார். இதற்காக நாங்கள் கடன் வாங்கி அவரிடம் பணத்தை கொடுத்தோம். அவர் கூறியபடி பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.