Skip to main content

தமிழகத்தில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை!

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Widespread rain in Tamil Nadu!

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வருகிறது.


நேற்று இரவில் பெய்த கனமழையால் கரூரின் அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது. அதேபோல் திருவண்ணாமலையில் செங்கம், போளூர், வேட்டவலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிந்தது. திருச்சியில் ஸ்ரீரங்கம், உறையூர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையானது நீடித்தது. அதேபோல் மதுரையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

 

மதுரையின் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை நீடித்தது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக மழை பொழிந்தது. அல்லம்பட்டி, அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. தஞ்சையைச் சுற்றியுள்ள கரந்தை, பள்ளி, அக்ரஹாரம், மாரியம்மன் கோவில், விளார் ஆகிய இடங்களில் மழை கொட்டியது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல, சேலம், ஆத்தூர், தேனி எனப் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.