Skip to main content

மேல்முறையீடா? தேர்தலா? - நாளை முடிவை அறிவிக்கிறார் தினகரன்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
ttv

 

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் டிடிவி தினகரன். 

 

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.


 
இந்நிலையில் மதுரையில் அமமுக  துணை பொதுச்செயலாளர் தினகரனை செய்தியாளர்கள் சந்தித்தனர்.  அப்போது அவரிடம் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பியபோது,

’’தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதா? தேர்தலை சந்திப்பதா என்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். 

மேலும், இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிலிப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்றும்  தெரிவித்தார்.  


 

சார்ந்த செய்திகள்