Skip to main content

அரிசி, பருப்பு வாங்கவே ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்.. பரிதவிப்பில் மலை மக்கள்!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சத்தியமங்கலம் மலை பகுதியும் வடக்கு பகுதியில் அந்தியூர் மலை காடுகளும் உள்ளது. சந்தன வீரப்பன் உலாவிய இந்த மலையின் நீளம் இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர். இதில் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களும் வசிக்கிறார்கள் அப்படியுள்ளதுதான்.

அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் மலை, பர்கூர் மேற்கு மலைப்பகுதியில்  ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூர், கோயில் நத்தம், செங்குளம், சின்ன செங்குளம், கொங்காடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது.  இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவு பொருள், மருத்துவ வசதிக்கு கீழ் பகுதியான அந்தியூர் தான் செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதி குக்கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தாமரைக்கரை என்ற இடத்தில்  பஸ் ஏறி அந்தியூர் சென்று வந்தனர்.  தங்களது கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சென்ற  ஐம்பது ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திடம்  வலியுறுத்தி கேட்டார்கள். பல போராட்டங்களும் நடத்தினார்கள் சென்ற ஆண்டு மக்கள் கோரிக்கையை ஏற்று  அரசு பஸ் இக்கிராமங்களுக்கு  இயக்கப்பட்டது. 

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

இது மலைவாழ் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.  இந்த நிலையில் தாமரைக்கரை கிராமத்திலிருந்து தாளகரை கிராமம் பிரிவு வரை 15  இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் வேலை  கடந்த  8 மாதமாக  நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுமிடத்தில் சாலைகள்  மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் இதில்  அடிக்கடி வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையே  சென்ற பத்து நாட்களுக்கு முன்பு பர்கூர் மேற்கு மலைக்கு சென்று வரும் வந்த அரசு பஸ் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சேற்றில் சிக்கி கொண்டது. இதை காரணம் காட்டி மேற்கு மலைக்கு பஸ்  இயக்கப்படுவதை நிறுத்திக் கொண்டது அரசு போக்குவரத்து கழகம் இதனால் பத்து மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பழையபடி 25 கிலோ மீட்டர் நடந்து தாமரை கரை வந்து பஸ் பிடித்து அந்தியூர் போவதும் பிறகு மீண்டும் 25  கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

மலைப்பகுதியில் ஆங்காங்கே சிறுபாலங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தாமதமான  நிலையில் நடந்து வருகின்றது. தற்போது மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மண் சாலையில் சிறு வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி மலைவாழ் மக்கள் நடந்து தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரிசி பருப்பு வாங்க கூட ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்ங்க முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கர்பிணி பெண்களை  தொட்டில் கட்டி காட்டுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய கொடுமைங்க.. அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட்டால் பத்து நாளில் மீதி உள்ள பணிகளை முடித்து பஸ் விட முடியும் ஆனால் கேட்பது மலை வாசி மக்கள் என்பதால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்கிறாங்க" என பரிதாபமாக கூறுகிறார்கள் அப்பாவி மலை வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

கஞ்சா புழக்கத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை! புகாரளித்தவர் மீது கொலை முயற்சி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
allegations of police did not notice the circulation of cannabis

மதுரை - திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது  நான்கு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதோடு, சுட்டுக் கொல்லவும் முயற்சித்துள்ளது.

இந்தக் கொலை முயற்சியின் பின்னணி என்ன?

திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவராக இருக்கிறார். கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் இவருடைய அலுவலகம் உள்ளது. இவர், தனது அலுவலகத்திலிருந்து கள்ளிக்குடி – விருதுநகர் நான்குவழிச்சாலையில் மையிட்டான்பட்டிக்கு காரில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியது.

இதனைத் தொடர்ந்து காரில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. பெட்ரோல் குண்டு காரில் படாத நிலையில், காரை ஓட்டிவந்த டிரைவர், சாலை ஓரப்பள்ளத்தில் காரை விட்டு தப்பித்துள்ளார். அந்தக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தபோது, எறிவதற்கு முன்பாகவே குண்டு வெடித்துள்ளது. உடனே,  அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிஒடியது.

இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிந்ததும், ஏ.டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆதிநாராயணன் மீது நடத்திய கொலை முயற்சி,  அக்கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, கொல்ல முயன்றவர்களைக் கைது செய்யக்கோரி, கள்ளிக்குடி – விருதுநகர் நான்கு வழிச்சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலைக் கைவிட்டனர்.

allegations of police did not notice the circulation of cannabis

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் “இரண்டு நாட்களுக்குமுன், விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி பகுதியில் காவல்துறையின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்து, திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தேன். நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன். காவல்துறையினரின் துணையோடு, ஏற்கெனவே என்னுடைய அமைப்பின் பொருளாளரைக் கொலை செய்த ஞானசேகரின்  ஆதரவாளர்களை ஏவிவிட்டு, என்னைக் கொலை செய்யும் நோக்கத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசி, துப்பாக்கியாலும் சுட்டுக்கொல்வதற்கு முயற்சித்தனர். கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் நான் உயிர் பிழைத்தேன். இந்த விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார்.