மாணவி அனிதா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

டாக்டர் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென நீண்ட கால கனவு கொண்டிருந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு 'நீட்' தேர்வு எமனாக மாறியதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் அனிதாவின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.