Skip to main content

சூதாட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த 9 பேர் கைது!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

9 arrested for gambling

 

கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் சிலர் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கணினி மூலம் 'ஒன் எக்ஸ் பெட் ஆப்' என்ற சூதாட்ட பந்தயம் நடந்துவந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

போலீசாரின் தீவிர விசாரணையின் அடிப்படையில்  கள்ளக்குறிச்சி அருகிலுள்ள செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது மணிகண்டன், ஓமலூர் சாமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர், மண்மலை கிருஷ்ணமூர்த்தி, சின்னசேலம் காந்திநகர் கோகுல்நாத், அருண்குமார், மணிகண்டன், சங்கராபுரம் மணிவேல், ஈஸாந்தை அரவிந்த், கரடிசித்தூர் பாலாஜி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்ட கேமின் தலைவனாக இருந்து செயல்பட்டுவந்துள்ளார். இவர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.

 

இந்த சூதாட்டத்தின் மூலம் மணிகண்டன் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சம்பாதித்த பணத்தில் மணிகண்டன் பல்வேறு இடங்களில் வீட்டு மனைகளில் முதலீடு செய்திருப்பதும், தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்ற எட்டு பேருக்கும் அவ்வப்போது பணம் பங்கிட்டும் கொடுத்துள்ளார். இந்த 9 நபர்களிடமிருந்து 30 மொபைல் ஃபோன்கள், 400 சிம் கார்டுகள், ஒரு ராயல் என்ஃபீல்டு பைக், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், டிவி, ஒரு வைஃபை, கைரேகை பதிவு செய்யும் கருவி, கணினி பயன்படுத்தும் யுபிஎஸ், ஆறு மானிடர்கள், 9 சிபியு ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

 

மேலும், கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார். இதுபோன்று கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக இளைஞர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.