134 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல 234 எம்.எல்.ஏக்களும் தன்னுடன் இருக்கிறார்கள் என்பார் எடப்பாடி: தினகரன் பேட்டி
134 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல 234 எம்.எல்.ஏக்களும் தன்னுடன் இருக்கிறார்கள் என்பார் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என மத்திய அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி 16ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
திமுக சார்பில் சபாநாயகரை சந்திப்பது என்பது அவர்கள் எடுத்துள்ள முடிவு அது அவர்களின் விருப்பம். 134 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல 234 எம்.எல்.ஏக்களும் தன்னுடன் இருக்கிறார்கள் என்பார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.