Skip to main content

இரவு பகலாக தூங்காத தொண்டர்கள்... ஆயுர்வேத மசாஜ் எடுக்க சென்ற மா.செ.!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021
ddd

 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அதன்பின் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்புகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏதாவது நடக்கலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அங்கு பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் நிறுத்தி வைத்துள்ளன. 

 

இதேபோல் ஆளும் அதிமுக அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் செய்து விடுவார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்களை தினம்தோறும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

அரசுத் தரப்பில் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் தினமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

ddd

 

வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக இருக்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பிழிச்சல் என்று சொல்லக்கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார்.

 

ddd

 

இந்த சிகிச்சையின் மூலம் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ஆயுர்வேத மசாஜ் செய்து மெல்லிசை நீரில் குளித்து உடம்பிலுள்ள தசைகள் மற்றும் நரம்புகள் சீராக செயல்படுவதற்கு எடுக்கப்படும் சிகிச்சைமுறை, இந்த சிகிச்சை முறையால் உடல் மற்றும் மனது மிகுந்த அமைதியாகவும் மிகவும் தளர்வாகவும் உடம்புக்கு தெம்பூட்டும் வகையிலும் அமையும் என்பதால் இந்த சிகிச்சைக்கு தற்போது கேரள மாநிலத்திற்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

இங்கு பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தொண்டர்கள் கண்விழித்து பாதுகாத்துவருகிறார்கள். இந்தநிலையில் இவர் கேரளாவிற்கு ஓய்வெடுக்க சென்று இருப்பது குறித்து தொண்டர்கள் கூறுகையில், திருச்சி மாநகரிலேயே எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்தான் என்று தொண்டர்கள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்து கொள்கிறார்களாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.