Skip to main content

களை கட்டியது ஈரோடு மண்டல திமுக மாநாடு! 2வது நாளிலும் லட்சக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
sta 1


ஈரோடு மண்டல திமுக., மாநாடு 24ம் தேதி ஈரோடு பெருந்துறை சரளை பகுதியில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாநகர், தந்தை பெரியார் திடலில் முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக துவங்கியது. இரண்டாம் நாளான இன்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர், லட்சக்கணக்கில் திரண்டனர்.

மாநாட்டையொட்டி மைசூர் அரண்மனையை போன்று பிரமாண்டமான முகப்பும், உட்புறம் இரண்டாவது முகப்பும் கட்சியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட திமுக.,வினர் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.
 

sta 2


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் 435 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்றும், கட்சியினர் பலரும் குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வருகை தந்து இரவு மாநாட்டு பந்தலிலேயே தங்கி, இரண்டாம் நாளான இன்றும் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர். முதல்நாளான நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் வயதை நினைவு கூறும் வகையில் 95 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் கொடியேற்றி வைத்தார்.
 

​  sta 2


இரண்டாம் நாளான இன்றும் பல்வேறு தலைப்புகளில் திமுக., தலைவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார். எழுச்சி மிகுந்த இந்த உரையை லட்சக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் கேட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

இடையில் திடீரென செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி ஒழுங்காற்று வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரே எழுதி நிறைவேற்றிய தீர்மான நகலை முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தை வாசிக்க வரும் போது தொண்டர்கள் விண்ணை முட்டும் அளவிற்கு கரகோஷம் எழுப்பினர். தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தப்பிறகு, இதை ஆமோதிக்கும் வகையில் கையை உயர்த்துமாறு தொண்டர்களை ஸ்டாலின் கேட்டு கொண்டார். இதையேற்று தொண்டர்கள் கையை உயர்த்தி, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமோதித்தனர்.
 

​  sta 2


மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று காலையில் இருந்தே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திமுக.,வினர் அலை, அலையாய் மாநாட்டு பந்தலை நோக்கி வந்தனர். மாநாட்டு பந்தலில் நடந்த தலைவர்களின் எழுச்சி மிகு உரையை கேட்டு, கரகோஷம் எழுப்பியும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களை வாழ்த்தியும் மாநாட்டில் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.

மாநாட்டு முகப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செல்பி எடுத்து அவற்றை வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு மகிழ்ந்தனர். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மாநாட்டு நிகழ்வில் வெளியூர்களில் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதால் மாநாடு களை கட்டியது.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.