Skip to main content

ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கும் அரவக்குறிச்சி தேர்தல் அதிகாரிகள்... தர்ணாவில் திமுகவினர்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

கரூர் எம்.பி. தேர்தலுக்கு கடைசி நாள் பிரச்சாரத்திற்கு செந்தில்பாலாஜி அனுமதி கேட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி அமைத்ததால் செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். பிறகு கலெக்டர் பிரச்சார நேரத்தை ரத்து பண்ணினார். அதையும் மீறி திமுகவினர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினர். ஆனால் தேர்தலை ரத்து செய்வேன். இல்லை என்றால் என்னை மாற்றி விடுவார்கள் என்று கரூர் கலெக்டர் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசியதால் பரபரப்படைந்தது. இறுதி பிரச்சாரம் கலவரத்தில் முடிந்தது. அதுபோன்ற நிலை தற்போது அரவக்குறிச்சி பகுதியில் கடைசி கட்ட பிரச்சார அனுமதிக்கு பிரச்சனை ஆகி வருகிறது.

 

senthilbalaji

 

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான நாளை அரவக்குறிச்சி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் 3 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அரவக்குறிச்சி டவுன் பகுதியில் ஸ்டாலின், பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
 

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் மீனாட்சி, திமுகவினர் கேட்டிருந்த 12 இடங்களில் 5 இடங்களை அதிமுகவினரும் கேட்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். ஆனால், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என யாரும் பிரச்சாரத்திற்கு வராதநிலையில் அதிமுகவினர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை.
 

இதையடுத்து செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் காலை 11 மணியளவில் அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் மீனாட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திமுகவுக்கு குறிப்பிட்ட 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்காமல் காலையிலே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கடந்த முறை எம்.பி. தேர்தலுக்கு செய்தது போன்றே தேர்தல் அதிகாரிகள் தடை விதிப்பதால். இதை திமுகவினர் ஏற்காமல் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து தர்ணா நடத்தினர். அதிகாரி மீனாட்சி, நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள், அனுமதி குறித்து நான் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். இதை திமுக தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் திமுகவினர் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்திருக்கின்றனர்.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
The court ordered the enforcement department! for Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Court order to enforcement department fot Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (20-02-24) நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.