Skip to main content

என்னை கேட்காம எப்படி உதவி செய்யலாம்... எப்ப தேர்தல் வந்தாலும் எனக்கு சீட் வேணும்... தி.மு.க.-வில் நடக்கும் உட்கட்சி அரசியல்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

dmk

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது இப்போது வரை சந்தேகமாக இருந்தாலும், அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்கள் ஓயவில்லை.

 

வேலூர் மாவட்ட தி.மு.க.வை சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு, மத்திய, மேற்கு என பிரித்த போது, மேற்கு மா.செவாக தேவராஜ் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு தலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வி நியமனம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டு தங்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார் என பலரும் முட்டிமோதினர். துரைமுருகனின் சிபாரிசு மீண்டும் தேவராஜ் பக்கமே இருந்தது. தேவராஜை மீண்டும் நியமிக்கக்கூடாது என பல நிர்வாகிகளும் தலைமைக்கு மனு அனுப்பினர். அந்த மனுக்களை ஒதுக்கிவிட்டு சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று கேட்டால், கட்சிக்குள் உள்ளடி கரோனா புகுந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.


கட்சி ரீதியாக வேலூர் மேற்கு மாவட்டம் எனச் சொல்லப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கான சீட்டை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, தி.மு.க. ந.செ ராஜேந்திரன், மாணவரணி மோகன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டையை வாங்கிட கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து உட்கட்சி சதியால் தோல்வியைச் சந்தித்த கவிதா முயற்சி செய்யகிறார். வாணியம்பாடி தொகுதியை வாங்கிவிட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முயற்சி செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் உள்ளார்.

 

மற்ற தொகுதிகளைவிட ஆம்பூர் தொகுதியைக் குறிவைத்துத்தான் போட்டி பலமாக உள்ளது. அந்தத் தொகுதியை முதலில் அணைக்கட்டு எம்.எல்.ஏவாக உள்ள மத்திய மா.செ நந்தகுமார் பணிகளைத் தொடங்கினார். மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் ஆம்பூர் சென்றதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போதே பேரணாம்பட்டு ஒ.செ. வில்வநாதன், மாதனூர் ஒ.செ சுரேஷ்குமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் மாவட்ட பொருளாளராகவுள்ள அண்ணா.அருணகிரி போன்றவர்கள் மோதினார்கள். ஆனால் வில்வநாதன் ஜெயிச்சிட்டார். 2021 தேர்தலில் இந்த ஆம்பூரை வாங்கிவிட அண்ணா.அருணகிரி, சுரேஷ்குமார், தொழிலதிபர் சரவணன் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காக தொகுதியில் கரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்குறாங்க. இதில் தொகுதி எம்.எல்.ஏவான வில்வநாதனை அழைக்காமலே அவர் ஒ.செ.வாக உள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குள் அண்ணா.அருணகிரி போய், கரோனா நலத்திட்ட உதவிகள் தந்தார். அதேபோல் ஆம்பூர் தொகுதிக்குள் வரும் மாதனூர் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ.-வைப் புறக்கணிப்பது போல் செயல்படுகிறார் சுரேஷ்குமார். இதுதான் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் வெடிச்சது.

 

dmk

 

கடந்த மே மாத இறுதியில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "என்னை கேட்காமல் என் ஒன்றியத்தில் எப்படி மாவட்ட பொருளாளர் வந்து உதவி செய்யலாம்'' எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், "என் ஒன்றியத்தில் நான் உதவிகள் செய்துகிட்டு இருக்கும்போது சம்மந்தமேயில்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு நிர்வாகிகள் வந்து, என்னிடம் தகவல் சொல்லாம, என் ஒன்றியத்தில் உள்ள அணி அமைப்பாளர்களை வைத்து எப்படி உதவி செய்யலாம்'' என மாவட்ட பொறுப்பாளரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதனால் மாவட்ட கமிட்டி கூட்டம் காரசாரமானது, இதுப்பற்றி தலைமைக்கும் புகார் போய்வுள்ளது என்றார்கள்.

 

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, "என் ஒன்றியத்திற்குச் சம்மந்தமேயில்லாத கட்சி நிர்வாகிகள் வந்து என்னிடம் கூட சொல்லாமல் உதவி செய்ததைத்தான் கேள்வி எழுப்பினேன், கட்சிக்கென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனால் கேள்வியாக எழுப்பினேன்'' என்றார். மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகிரியிடம் நாம் கேட்டபோது, "மாவட்ட கமிட்டி கூட்டம் என்பது எங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விவகாரம் அதுப்பற்றி நான் வெளியே பேச விரும்பவில்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு, உள்ளடி வேலை பார்த்ததால் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதில் கோட்டைவிட்டது என்கிறார்கள் கட்சியின் விசுவாசிகள். இப்போதே கோஷ்டி சண்டையைத் துவங்கிவிட்டார்கள், தலைமை தலையிடவில்லையென்றால் கடந்த தேர்தலைப் போல் வரும் தேர்தல் எப்போது நடந்தாலும், கட்சியின் வெற்றியை உள்ளடிகள் காலை வாரிவிடும் என்பதே கள நிலவரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்