Skip to main content

நான் கலைஞரின் மகன் இல்லையா? அவருடைய மூளையில் 25 சதவீதமாவது என்னிடம் இருக்கும் அல்லவா? மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று காலை முதல் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். 
 

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வாவிகனம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, 
 

இப்ப நடைபெறுகிற 22 எம்.எல்.ஏ.கள் வெற்றியையும் சேர்த்தால் நமக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கும். ஒரு ஆட்சி இருக்க வேண்டும் என்றால் 118 இருந்தால் தான் மெஜாராட்டி. அதனால் தானாக நம்முடைய ஆட்சி வந்துவிடும். இந்த கணக்கு எடப்பாடிக்கு தெரிந்து விட்டது. இப்போது மைனராட்சி ஆட்சி. இதை நடந்துவது மோடி தான் அவரின் தயவில் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது. 

 

dmk campaign



ஆனால் எப்படியும் 23ம் தேதி ஆட்சி கவிந்து விடும் என்கிற பயத்தில் ஒரு சூழ்ச்சி திட்டம் போட்டு 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தால் இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. இதை மனதில் வைத்து தான் சபாநாயகர் மூலம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இப்படி ஒரு சூழ்ச்சி பண்ணி திட்டம் போட்டதால் நான் கலைஞரின் மகன் இல்லையா? அவருடைய மூளையில் 25 சதவீதமாவது என்னிடம் இருக்கும் அல்லவா? அதனால் தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். 
 

ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விட்டால் அதை மட்டும் எதிர்கொள்கிற மட்டுமே செய்ய வேண்டும் மற்ற வேலைகளை செய்ய கூடாது என்று தீர்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் சபாநாயகருக்கு ஒரு நோட்டிஸ் வடிவில் ஒரு ஆப்பு வைத்தேன்.

 

dmk campaign



இதற்கிடையில் 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை உத்தரவு வாங்கினார்கள். ஆனால் இந்த எடப்பாடி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தடை ஆணை வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக உச்சநீதிமன்றம் விடுமுறை விட்டதால் அவர்களுக்கு கெட்டநேரம் நமக்கு நல்ல நேரம். இனிமே அவர்களால் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியாது. 23ம் தேதிக்கு பிறகு மோடியே ஆட்சியில் இருக்க மாட்டார் என்பதால் இனி எடப்பாடி ஆட்சி நீடிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.