Skip to main content

“ஏன் இத்தனை நீதிமன்றங்கள்?” அமைச்சர் பிடிஆர்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

49th GST Council Meeting; Minister PDR press conference

 

மத்திய நிதியமைச்சர் தலைமையில் 49 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

 

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2020-2021, 2021-2022க்கான பாக்கிகள் இதுவரை தணிக்கை அறிக்கைக்காக காத்திருந்தது. அதை கொடுப்பதா, இல்லையா? என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மத்திய நிதி அமைச்சர் தணிக்கை அறிக்கை வந்ததற்கு தேவையான நிதி அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

 

அந்த அடிப்படையில் 2020-2021க்கு தணிக்கை அறிக்கையின் படி ரூபாய் 4230 கோடி வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022க்கு இன்னும் சில காலம் ஆகும். இன்று மிக முக்கியமான ஒரு தலைப்பு, ஜிஎஸ்டி குறித்தான தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்குமா? ஒன்றிய அளவில் இருக்குமா? அதில் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்? எந்த தேர்வுக்குழு இருக்க வேண்டும் என்ற நீண்ட விவாதம் வந்தது. அதற்கு மத்திய அரசு ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. 

 

அந்த அறிக்கைக்கு 13 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், உறுப்பினர்களின் நியமனத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்ற காரணத்திற்காகவும் குழுவின் அறிக்கையினை ஏற்கவில்லை. அதனால் இரண்டு மூன்று மணி நேரம் விவாதம் நடந்து பல திருத்தங்கள் சொல்லி அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட நிறைவுக்கு வரும் சூழலில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தகவல்களுக்கு ஒப்புதல் பெறவில்லை. அதனால் அதை எல்லாம் எழுதி அனுப்பி எங்கள் ஒப்புதலைப் பெறுவதாக கூறியுள்ளார்கள். அது இன்னும் சில தினங்களில் நடக்கும். இது மிக முக்கியமான முன்னேற்றம். 

 

ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது மிகச் சுலபம். அதை செயல்படுத்துவது மிகக் கடினம். ஹரியானாவின் துணை முதல்வர் என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் எனக் கூறினார். அதற்கு ஒரே நாடு ஒரே வரி என்பதற்கு ஒரு தீர்ப்பாயம் இருக்க வேண்டும் எனச் சொன்னால், ஒரே நாடு ஒரே சட்ட அமைப்பில் ஏன் இத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறது. வணிக வரி சட்டங்களை நாங்கள் ஏன் மீண்டும் மீண்டும் மாற்றுகிறோம். அதனால் இம்மாதிரியான ஸ்லோகன்களை வைத்து பேசுவது அரசியலுக்கு சரிப்படும். ஆனால், செயல்பாட்டுக்கு சரிப்படாது” எனக் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.