Skip to main content

குறையாத கரோனா பாதிப்பு... மீண்டும் அதிர்ச்சியில் கேரளா!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

gh

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விடச் சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. 

 

இன்று 6,028 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6,720 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 4,81,394 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,61,922 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை  67,070 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 27 பேர் கரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாகக் கரோனாவுக்கு 1,945 பேர் பலியாகியுள்ளனர். சில வாரங்களாகக் குறைந்து வந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்