Skip to main content

ஆரோவில்லில் தென்கொரிய பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட பிரான்ஸ் ஊழியர் கைது! 

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில்லில் உள்ள சீ.வி டேம் கம்யூனிட்டி என்ற பகுதியில் தென்கொரியாவை சேர்ந்த வாக்கர் ஜோரி- ஹைய் ஜோங் ஹீ தம்பதியினர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ஹைய் ஜோங் ஹீ (52) ஆரோவில்லில் பணியாற்றி வருகிறார். 
 

இவர்களுடைய வீட்டின் அருகே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் பால் மோர்லஸ் (71) என்பவர் தங்கியுள்ளார். இவர் கடந்த 24 ஆண்டுகளாக ஆரோவில்லில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 22- ஆம் தேதி இரவு வீட்டின் அருகே இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் மோர்லஸ். இரவு 10.00 மணி தாண்டியும் இசைக் கச்சேரி நடத்திய அவர் மிக அதிக சப்தத்துடன் கச்சேரி நடத்தி உள்ளார்.  

puducherry aurovile women incident police

அப்போது அருகாமை வீட்டிலிருந்த ஹைய் ஜோங் ஹீ தனது கணவர் வாக்கர் ஜோரியுடன் வெளியில் வந்து, 'ஏன் அதிக சப்தத்துடன் இசை கச்சேரி நடத்துகிறீர்கள்? எங்களால் தூங்க முடியவில்லை' என்று கேட்டுள்ளனர். அதற்கு மோர்லஸ், 'நான் இங்கு அதிக நாட்களாக இருப்பவன். எனவே உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.  
 

நீங்கள் வேண்டுமானால் வீட்டை காலி செய்து செல்லுங்கள். இல்லை என்றால் நான் உங்களை வெளியேற்றுவேன்' என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து ஆரோவில் வெல் காபி என்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஹைய் ஜோங் ஹீயை தகாத வார்த்தையில் திட்டி கைகளால் தாக்கியுள்ளார் மோர்லஸ். 
 

மேலும் அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஹைய் ஆரோவில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதன் பேரில் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து  கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மோர்லஸை ஆரோவில் பகுதியில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 
 

இந்நிலையில் டி.எஸ்.பி அஜய்தங்கம் கூறும்போது, "ஆரோவில் பகுதியில் இசைக்கச்சேரி, நடனம் உள்ளிட்டவைகள் நடத்த தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.