Skip to main content

கேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்!!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
marriage incident in kerala

 

திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியை சோ்ந்தவா்கள் பிரேம்குமாா்- ரமாதேவி தம்பதிகள். குருவாயூா் கிருஷ்ணன் பக்தரான இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் கிருஷ்ணனிடம் முறையிட்டு வணங்கி வந்தனா். இந்த நிலையில் அவா்களின் ஆசைக்கும் நம்பிக்கைக்கும் பலனாக ரமாதேவியின் ஒரே பிரசவத்தில் 1995 நவ.18- ம் தேதி 5 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு ஆண் 4 பெண்கள் பஞ்சரத்தினங்கள் பிறந்து விட்டது என கூறி அந்த தம்பதியினா் ஆனந்தமடைந்தனா்.

உத்திரம் நட்சத்திரத்தில் அந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஆண் மகனுக்கு உத்ரஜன் என்றும் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என பெயாிட்டனா். ஒரே பள்ளி கல்லூாியில் சோ்த்து படிக்க வைத்தனா். அந்த ஊரே பஞ்சரத்திரன குழந்தைகள் என அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறு பெட்டி கடை நடத்தி வந்த பிரேம்குமாா் சாியான வருமானம் இல்லாததால் கடன் ஏற்பட்டு அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாா். அப்போது அந்த குழந்தைகளுக்கு 9 வயது.

இதனால் அந்த குழந்தைகளின் எதிா்காலத்தை நினைத்து அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் லோக்கல் அரசியல்வாதி ஒருவாின் முயற்சியில் தாயாா் ரமாதேவிக்கு அரசு கூட்டுறவு துறையில் வேலை கிடைத்தது. ரமா தேவி கஷ்டப்பட்டு அந்த குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் வயது வரை ஆளாக்கினாா். மேலும் ஏற்கனவே ஆரம்பத்தில் நினைத்தப்படி 5 குழந்தைகளுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதுவும் குருவாயூா் கோவிலில் வைத்து தான் திருமணம் என முடிவு செய்து வரன் தேடினாா்.

 

marriage incident in kerala


அவா் நினைத்த படி 5 பேருக்கும் வரன் கிடைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 5 பேருக்கும்  திருமணம் நடக்க இருந்த நிலையில் கரோனா தாக்கத்தால் திருமணம் தடைப்பட்டது. இதனால் நவ.26-ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் மகனுக்கு வரன் சில பிரச்சினைகளால் மாறியது. இதனால் 4 மகளுக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தாா். ஃபேஷன் டெக்னாலஜி முடித்த உத்ராவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் ஆயூரை சோ்ந்த அஜின், ஆன்லைன் ஊடக பிாிவு செய்தியாளா் உதாராவுக்கு கோழிக்கோடு சோ்ந்த பத்திாிக்கையாளா் மகேஷ், திருவனந்தபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசியன் உத்தமாவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் வட்டியூா்காவை சோ்ந்த வினீத் ஆகிய 3 பேருக்கு மட்டும் அன்று திருமணம் நடந்தது.

எா்ணாகுளத்தில் அமிா்தா மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் உத்ரஜாவுக்கு பேசி முடிக்கப்பட்ட குவைத்தில் ஒரு மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் பத்தணம்திட்டையை சோ்ந்த ஆகாஷ்க்கு கரோனா சூழ்நிலையால் ஊருக்கு வர விசா கிடைக்காததால் இவா்களின் திருமணம் மட்டும் தடைபட்டது.  இந்த திருமணத்தில் உறவினா்களை விட இந்த பஞ்சரத்தினம் குழந்தைகளை கேள்வி பட்டவா்கள் அதிகம் போ் கலந்து வாழ்த்தினாா்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.