Skip to main content

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று... பாஜக -வுக்கு அதிர்ச்சியளித்த காங்கிரஸ்...

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக முடிவுக்கு வந்தது. குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

 

bjp mlas supported congress in madhyapradesh

 

 

இந்நிலையில் கர்நாடகாவை போலவே, தனி பெரும்பான்மை இல்லாமல் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் மாநிலம் மத்தியபிரதேசம். அங்கு மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியது, இதனை தொடர்ந்து நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் நடந்ததை போல விரைவில் மத்தியபிரதேசத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அம்மாநில அரசியலிலும் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் நேற்று மத்தியபிரதேச சட்டசபையில், குற்றவியல் சட்டமசோதா 2019 மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு சபாநாயகர் பிரஜாபதி நீங்கலாக ஆதரவாக 120 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களும், 2 பாஜக எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் பாஜக வுக்கு ஆதரவாக மாறலாம் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ க்கள் 2 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக மாற்றி வாக்களித்த 2 எம்.ஏ க்களும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எம்.எல்.ஏ க்கள் இருவரும், தங்கள் தாய் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தங்கள் சொந்த வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.