சூரியன் மறைவிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/10/Goa.jpg)
இந்தநிலையில் கோவா கடற்கரையில் மது அருந்தி விட்டு கடலில் குளிக்கும் சில நபர்கள் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சூரியன் மறைவிற்கு பிறகு கோவா கடலில் குளிக்க கூடாது என்ற தடையை அம்மாநில அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக சுற்றுலா துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆமதாபாத்தை சேர்ந்த 2 மாணவர்கள் வடக்கு கோவாவில் உள்ள கண்டோலிம் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன் 2 பேர் பலியாகினர். சூரியன் மறைவிற்கு பிறகே இந்த சம்பவங்கள் நிகழ்கிறதாக அங்கு இருக்கும் சுற்றுலா பயணிகள் கூறிகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சூரியன் மறைவிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க கூடாது என்ற தடையை கோவா அரசு கொண்டு வர உள்ளது.