Skip to main content

கட்சி மாறிய மா.செ..! -அதிர்ச்சியில் விஜயகாந்த்..! 

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், சென்னை வடக்கு மாவட்டம், தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் ப.மதிவாணன் தி.மு.க.வில் இணைந்தார். அதன்போது சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்   ஆகியோர் உடனிருந்தனர். 

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் மதிவாணன். மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுகவிற்கு சென்றது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

''விஜயகாந்த் மீது மரியாதை வைத்திருந்ததால் தேமுதிகவில் பணியாற்றி வந்தேன். தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் திசை மாறியுள்ளது. கட்சியில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கட்சித் தலைவரான விஜயகாந்த்க்கு தெரியுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் திமுகவில் சேருவார்கள். விரைவில் வடசென்னை மாவட்ட தேமுதிக கட்சி தொண்டர்கள் திமுகவில் இணைய இருக்கின்றனர்'' எனத் தெரிவித்தார் மதிவாணன்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேமுதிகவில் இதேபோல்தான் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் சிலர் கட்சி மேல் சில குறைகளைத் தெரிவித்து வெளியேறினார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் ஒருவர் தேமுதிகவிலிருந்து வெளியேறியிருப்பதால் அதிர்ச்சியில் உள்ளனர் தேமுதிக தொண்டர்கள். நிர்வாகிகளை அனுசரித்து ஒன்றிணைக்காவிட்டால் கடந்த சட்டமன்றத் தேர்தல்போல் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தலைமைக்கு தெரிவித்துள்ளனர் முக்கிய பொறுப்பாளர்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைக்குமாறு மாநில பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.