Skip to main content

தீபாவளியை முன்னிட்டு 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு காவலர்...

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
police

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது. இதற்காக ஜிஎஸ்டி சாலையில் காவல்துறையினர் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரை 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை உடனே சரிசெய்ய 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்படுவர். மேலும் இன்றுமுதல் 6 நாட்களுக்கு கூடுதல் கண்காணிப்பாளர் 2 பேர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 

சார்ந்த செய்திகள்