Skip to main content

தொடர்ந்து குறையும் கரோனா தொற்று... விரைவில் 1000க்குள் வரும் எனத் அதிகாரிகள் நம்பிக்கை!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

்ிு


தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 200க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 26,96,489 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,47,632 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,033 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,22,631 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 5,04,23,638 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 12,791 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதே எண்ணிக்கையில் சென்றால் விரைவில் தொற்று எண்ணிக்கை தினசரி தொற்று எண்ணிக்கை மூன்றிலக்கத்தில் வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்