Skip to main content

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

jl

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இந்திய அணி தற்போது டி20 உலககோப்பையில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டவர்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த டி20 உலககோப்பைக்கு பிறகு வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்