Skip to main content

30 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்த கரோனா தினசரி பாதிப்பு... 415 பேர் பலி!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

f

 

இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,689 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 415 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து நேற்று (26.07.2021) ஒரே நாளில் 42,363 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.14 கோடி பேர் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 3.65 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3.98 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று காரணமாக இதுவரை 4.21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்