Skip to main content

சசிகலாவை காப்பாற்றும் எடியூரப்பா...செம்ம கடுப்பில் மோடி...ரெய்டில் எஸ்கேப் ஆன சசிகலா!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சிறையை பெங்களூரு போலீசார் திடீர் என சோதனை நடத்தினர். அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை முதல் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த ரெய்டு பற்றிய செய்தி வெளியானதும் சசிகலா சொந்தங்கள் பரபரப் படைந்தன. சிறைக்குப் போன நாளில் இருந்து சிறிது காலம் முன்பு வரை புகழேந்திதான் சசிகலாவிற்கு தேவையானவற்றை செய்து வந்தார். அதற்காக சிறை வளாகத்திலும், சிறைக்கு பக்கத்தில் சசிகலாவுக்கு தேவையானவற்றைக் கொண்டு வருவதற்காக வாங்கப்பட்ட அப்பார்ட் மெண்ட்களிலும், "எலக்ட்ரானிக் சிட்டி' எனப்படும் அந்த சிறைப்பகுதி அமைந்துள்ள லாட்ஜ்களிலும் புகழேந்தியின் இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கியிருந்தனர். அவர்களில் எழுபது பேர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சசிகலாவின் தேவைகளை கவனித்து வந்த அவர்களை திடீரென "வேண்டாம்' என டி.டி.வி.தினகரன் நீக்க முயன்றார்; அதை சசிகலா ஏற்கவில்லை.


  sasi



டி.டி.வி.தினகரன், புகழேந்திக்கிடையே மோதல் வலுத்து வரும் நிலையில்தான் சிறையில் ரெய்டு நடந்துள்ளது. போலீசார் நடத்திய ரெய்டில் சிறையில் கத்தி, கஞ்சா, குடிக்க உபயோகப்படுத்தும் குடுவை, சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. சுதாகரன் அறையில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல் பெண்கள் சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் அறையிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிறைத்துறை அறிவித்தது. மற்ற கைதிகள் உபயோகிக்கும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்போது சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உபயோகிக்கும் செல்போன்கள் போலீசார் கண்களில் எப்படி படாமல் போனது?

  ammk



சசிகலா முறைகேடாக சிறையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார். அவருக்கு பணிவிடை செய்ய பெண் கைதிகள் இருக்கிறார்கள். சமையல் முதல் அறைகளை சுத்தப்படுத்துவது வரை பெண் கைதிகளை வைத்திருக்கும் சசிகலா... தனக்கான சிறை வளாகத்திலேயே இரண்டு, மூன்று அறைகளை கொண்ட காம்ப்ளக்ஸையே ஆக்கிரமித்திருக்கிறார். அவருக்காக சமைக்க எலெக்ட்ரிக் ஸ்டவ், குளிர்சாதன பெட்டி எல்லாம் இருக்கிறது. சிறையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளில் சசிகலா அடிக்கடி சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே வருகிறார். இதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். சிறைத்துறை தலைவராக இருந்த ஒருவருக்கு ஹைதராபாத் நகரில் உயர்ந்த ரக ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த சிறைத்துறை அதிகாரியும், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனுக்கு உதவினார் என போலீசாரால் குற்றஞ்சாட்டப்படும் ஆஸ்திரேலியன் பிரகாஷும் சந்தித்து பேசினார்கள் என சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார். ரூபாவின் குற்றச்சாட்டுகள் உண்மையா என ஆராய, வினய்குமார் என்கிற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அப்பொழுது முதல்வராக இருந்த சித்தராமையா அமைத்தார்.

 

jail



வினய்குமார் நடத்திய விசாரணையில் "சசிகலா சிறை விதிகளை மீறினார். விதிகளை மீறி சசிகலா சலுகைகள் அனுபவிப்பதற்கு அதிகாரிகளின் லஞ்ச ஊழலே காரணம். சிறைத் துறை அதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். அதைப் பற்றி கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்' என அறிக்கை கொடுத்தார். ஆனாலும் சசிகலா விஷயத்தில் சித்தராமையா கண்டுகொள்ளாமலேயே இருந்தார். அதன்பின், குமாரசாமி அரசிலும் தேவேகவுடா மூலம் சசி தரப்பு இதே செல்வாக்குடன் இருந்தது. சிறையிலேயே கன்னடம் கற்க ஆரம்பித்தார் சசிகலா. நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலைக்கு முயற்சி செய்து வரும் சசிகலா, சமீபத்திய ரெய்டிலும் தப்பித்து விட்டார் என்றார்கள் அவரது உறவினர்கள். ரெய்டுக்கு காரணம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் எதிரிகள்தான். எடியூரப்பாவிற்கும் நரேந்திர மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும், கர்நாடகாவில் எடியூரப்பா தயவின்றி பா.ஜ.க. வெற்றிபெற முடியாத நிலையே நீடிக்கிறது.

 

roopa



சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அரசியலுக்குரிய அத்தனை வழிகளையும் பயன்படுத்தி முதல்வரானார் எடியூரப்பா. அவரது இந்த திறமை மோடிக்குப் பிடிக்கவில்லை. எடியூரப்பாவை இன்று வரை மோடி சந்திக்கவேயில்லை. அமைச்சரவை கூட அமைக்க விடவில்லை. முதல்வராக இருக்கக்கூடாது என்கிற மோடியின் விருப்பத்திற்கு மாறாக அமைச்சரவையை உருவாக்கினார். அதில் நான்கு துணை முதலமைச்சர்களை நியமித்தார். தனக்கு நெருக்கமான ஷோபாவையும் தனது மகனையும் அமைச்சராக்க எடியூரப்பா முயன்றார். மோடி அதற்கு சம்மதிக்கவில்லை. எடியூரப்பா எதை பேசினாலும் அதற்கு எதிராக கர்நாடகா பா.ஜ.க. தலைவர்களை பேச வைக்கிறார் மோடி. எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி. அவருக்கு பதில் இளைஞர் ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும் என மோடி முயல்கிறார். அதற்காகத்தான் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை குறி வைத்தார். ஆனால் எடியூரப்பா உதவியுடன் ரெய்டிலிருந்து சசிகலா தப்பித்தார்'' என கர்நாடகா அரசியலில் சசிகலாவின் தலை உருட்டப்படுவதை விளக்குகிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.