Skip to main content

"யாருக்கும் சீட் கேட்கமாட்டேன்"...எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை...களத்தில் இறங்கும் அமைச்சர்கள்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் நடந்த நாங்குநேரி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், எனது உறவினர்கள் யாருக்கும் சீட் கேட்கமாட்டேன் என அகில இந்தியத் தலைமையிடம் சொல்லிவிட்டேன் என்றார் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வும் கன்னியாகுமரியின் இப்போதைய எம்.பி.யுமான வசந்தகுமார். ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு சீட் வாங்குவதில் மும்முரம் காட்டினார்.

 

congress



இவரின் விருப்பத்தின் பேரிலேயே விருப்பமனு கொடுத்தார் குமரி அனந்தன். சிலபல காரணங்களால் நிற்க மறுத்தார் குமரி அனந்தன். அடுத்ததாக, தனது சகலையான ஆலங்குளம் காமராஜை சீட் சீனுக்கு கொண்டுவர, வசந்தகுமார் முயன்றும் முடியவில்லை. கடைசியாக தனது சம்பந்தி ரூபி மனோகரனை களத்தில் இறக்கிவிட்டார். எத்தனை "சி' என்றாலும் தயார் என்ற முடிவுடன் களத்தில் குதித்திருக்கிறார் ரூபி மனோகரன்.


ரூபி மனோகரனை காங்கிரஸ் மேலிடம் ஓ.கே. சொல்வதற்கு முன்னால் மற்றொரு ரகசிய டீல் ஒன்றும் நடந்திருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ், மாஜி எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்தி, 25 "சி' வரை செலவழிக்கத் தயார் என கே.எஸ்.அழகிரிக்கு அட்வான்ஸ் சிக்னல் போட்டிருக்கிறார். ஆனால் அமிர்தராஜின் உறவினர்களோ ஒன்றரை வருஷ எம்.எல்.ஏ. பதவிக்கு இம்புட்டு செலவழிப்பது வேஸ்ட் என்றதும், சிக்னல் இடம் மாறி ரூபி மனோகரன் பக்கம் வந்துள்ளது.

தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஆரம்பிக்கும் முன்பே தி.மு.க. ஜரூராக ஆரம்பித்துவிட்டது. கட்சியின் து.பொ.செ. ஐ.பெரியசாமியின் தலைமையில், கடந்த 29-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட தி.மு.க. பெருந்தலைகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "நாங்குநேரியில் நிற்பது காங்கிரஸ் வேட்பாளர் தானேன்னு அலட்சியமா இருந்துடாதீங்க. நம்ம தளபதியே நிற்பதா நினைச்சு வேலை பாருங்க. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியப் பிடிப்பதற்கு இந்த இடைத்தேர்தல்தான் அச்சாரம்''’என உற்சாகமூட்டியிருக்கிறார் ஐ.பி. தேர்தல் பணிக்குழுவில் கருப்பசாமி பாண்டியன் பெயர் விடுபட்டிருப்பதை சிலர் சுட்டிக்காட்டியதும் "கானா'வின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சி தரப்பிலோ நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாராயணன் களம் இறங்கியிருக்கிறார். பொருளாதார ரீதியில் நாராயணன் சுமார் ரகம் என்றாலும், இது எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை என்பதால் அமைச்சர்கள் பட்டாளத்தின் பணப்பாய்ச்சல் தாராளமாக இருக்கும். இதை சமாளிப்பதில்தான் காங்கிரஸ் ரூபி மனோகரனின் சாமர்த்தியம் இருக்கிறது.
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.