Skip to main content

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழக முஸ்லிம்கள்... கவனத்தை ஈர்த்த சம்பவம்... ஆதரவு கொடுத்த எதிர்க்கட்சிகள்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றிரவே தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 

incident



சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமி ஆகியோர் அத்துமீறியதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்தே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த, கமிஷனரும் கூடுதல் கமிஷனரும் முயற்சியை மேற்கொண்டனர். அது பலனளிக்கவில்லை. இதற்கிடையில் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முடிவுசெய்தனர். போராட்டம் நடப்பது முடிவானதும் அதற்கான செயல்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின.

இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் ஒவ்வொரு தெருவிலும், சந்திலும் தகவல்தொடர்பு கண்ணிமைக்கும் வேகத்தில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு தங்களின் முழுமையான எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டுமென்ற வேகமே இதற்கான உந்துசக்தியாக அமைந்தது.

தமிழ்நாடு முழுக்க சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடிக்குமென உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி முன்கூட்டியே சொல்லியிருந்தார். அதனால், பிப்ரவரி 14-க்கு முன்பிருந்தே வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டங்களையும், மக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வந்த காவல்துறை, முற்றுகைப் போராட்டத்தை முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தவும், முடிந்தால் தடுத்துநிறுத்தவும் இன்னொரு பக்கம் செயல்பட்டு வந்தது. போராட்டக்காரர்களின் செல்போன், தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட் டன. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி பெரிய அளவுக்கு திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
 

incident



சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஆறு பேர், ரயில்வே பாதை உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பாதுகாக்க ஆறுபேர் நியமிக்கப்பட்டனர். சென்னை நகரத்தை மட்டும் சென்னை போலீஸ் கமிஷனரான ஏ.கே. விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் விடுவதென முடிவுசெய்யப்பட்டது. மற்ற இடங்களில் நடக்கிற போராட்டங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை டிஜி.பி.யான ஜே.கே. திரிபாதியும் இன்டலிஜன்ஸ் ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் எடுத்துக்கொண்டனர்.

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதியளிக்கவில்லை. அதேசமயம் இந்தப் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாதென உயர்நீதிமன்றத்திலும் வாராகி என்பவர் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு போராட்டத்துக்குத் தடைவிதித்தது. இருந்தபோதிலும் தடையை மீறி போராடுவதென போராட்டக் குழு முடிவுசெய்தது.


போராட்டத்துக்கு 23 இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவளிக்க முன்வந்தன. போராட்டத்தன்று சென்னையில் திரண்ட மக்கள் கூட்டம் காவல் துறையே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என பெருமளவில் திரண்டுவந்து கலந்துகொண்டது காவல்துறையை மட்டுமின்றி போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சிகளையும் ஆச்சரியப்பட வைத்தது.

எனினும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் சர்ச்சைக்கு ஆளான தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமியை போராட்டக்காரர்கள் காணநேர்ந்தால் உணர்ச்சிவசப்படக் கூடுமன்பதால் புத்திசாலித்தனமாக அவர்களைத் தவிர்த்திருந்தனர் காவல்துறை உயரதிகாரிகள்.

ஊர்வலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ள வஜ்ரா வாகனம், தண்ணீர் பாய்ச்சும் வாகனம், ஆயிரக்கணக்கான போலீசார் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருந்தது. காலை பத்து மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சேப்பாக்கம் நோக்கி பேரணி நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் போராட்டக்காரர்கள் கட்டுப்பாடாக நடந்துகொண்டனர்.


போராட்டக்காரர்கள் பேரணியில் முழுமையான ஒழுங்கைக் கடைப்பிடித்தனர். தேசியக் கொடியைத் தவிர வேறந்த கட்சிக் கொடியையும் ஊர்வலத்தில் கொண்டுவரவில்லை. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு, பேரணியில் நடந்து வருபவர்களுக்கு நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, போராட்டத்தின்போது போடப்பட்ட குப்பைகளை அவர்களே பொறுக்கி ஒரு முன்னுதாரணமாக நடந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக நடந்த உரையிலும் யாரும் எதிர்மறையாக, சர்ச்சையாகப் பேசாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டமென அறிவிக்கப்பட்டாலும், நீதிமன்றம் தடைவிதித்ததால் பேரணியோடு முடித்துக்கொண்டனர் போராட்டக் குழுவினர். முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்தனர். தமிழகத்தின் பல நகரங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தனர் தமிழக முஸ்லிம்கள். 

 

அருண்பாண்டியன்

படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்

 

 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்