ADVERTISEMENT

வெட்டுக்கிளிகளின் திடீர் வருகை ஏன்..? பதிலளிக்கிறார் ஜியோ டாமின்!

10:56 AM May 28, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT



சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

ADVERTISEMENT


சினிமாவில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் போலவே தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் ஏன் கூட்டம் கூட்டமாக வருகின்றது, எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ. டாமின். கேள்வி பதில் பின்வருமாறு,

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ராஜஸ்தான் பகுதிகளில் இது நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பித்து பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளன. வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்புக்கு என்ன காரணம், எதனால் இது ஏற்படுகின்றது?


பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் இடப்பெயர்ச்சி என்று பார்த்தால் அது உணவுக்காகவே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும். வெட்டுக்கிளிகள் ஏன் இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டம் கூட்டமாகச் செல்கிறது என்றால் அதற்கு முதலில் வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் பார்க்கின்ற வெட்டுக்கிளிகள் 'லோகஸ்ட்' என்று அழைக்க கூடிய வகையைச் சார்ந்தது. அதாவது நம்முடைய வீடுகளில் பார்க்கக் கூடிய வெட்டுக்கிளிகளைப் போல் இதுவும் ஒரு வகையான வெட்டுக்கிளிகள். 22 வகையான வெட்டுக்கிளிகள் இந்த 'லோகஸ்ட்' என்று சொல்லக்கூடிய வெட்டுக்கிளி வகைகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த வகை வெட்டுக்கிளிகள் தான் தோட்டங்கள், வீடுகளைத் தாக்கக்கூடியதாக நாம் பார்த்து வருகின்றோம்.

வெட்டுக்கிளிகளின் பூர்விகம் என்று பார்த்தால் வட கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சொல்லலாம். இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் நம்முடைய விளை நிலங்களில் எப்படி நான்கு ஐந்து வெட்டுக்கிளிகள் நிலத்தைச் சேதப்படுத்துமோ அந்த வகையான வெட்டுக்கிளிகள் தான் இவை. இது அனைத்தும் எப்போது அதிரடியாக ஒன்று கூடுகிறது என்றால் கடுமையான வறட்சி ஏற்படுகின்ற போது பசுமையான பகுதிகளை நோக்கி தனிதனியாக இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்கின்றன. இதனால் அவைகள் கூட்டம் கூட்டமாக நமக்குத் தெரிகின்றன. அப்படி அவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாவரங்களைச் சேதப்படுத்துகின்ற போது 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள் வெட்டுக்கிளிகளில் உற்பத்தி ஆகின்றது.


அந்த வேதிப்பொருட்கள்தான் இந்த வெட்டுக்கிளிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் எப்போது உற்பத்தி ஆகின்றதோ அப்போதிலிருந்து அந்த வெட்டுகிளிகளின் நடை, உணவுப் பழக்க வழங்கங்கள், வேகம் உள்ளிட்ட அனைத்தும் மாறிப்போகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் பொதுவாகவே 100-க்கும் மேற்பட்ட முட்டைகளைப் போடக்கூடியவை. ஒரு வறட்சி காலத்தில் இருக்கும் போது, அந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு மழைக்கான சிக்னல் கிடைக்கின்ற போது, நாம் இந்த இடத்தில் பல்கிப்பெருகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கின்றது.

அப்போது அந்த வெட்டுக்கிளிகள் போடுகின்ற முட்டைகள் அவர்களின் பெற்றோரைச் சார்ந்து இருக்காது முற்றிலும் வடிவமைப்பிலும், நிறத்திலும், மூளை அளவுகளில் கூட வித்தியாசமாக இருக்கும். பறக்கும் திறனும், உணவு உண்ணும் திறனும் கூட தன் பெற்றோரை விட அந்த வெட்டுக்கிளிகளுக்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஒரே நேரத்தில் உருவாகும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உணவுக்காகத் தொடர்ந்து பசுமையான இடத்தை நோக்கிச் செல்கின்றது,என்றார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT