Skip to main content

தொழில் போட்டி! திருநங்கை கொலையில் திருப்பம்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

விழுப்புரம் அருகே செஞ்சிசாலையில் ஜெயேந்திரா பள்ளி உள்ளது. இதனருகில் கடந்த 17-ம்தேதி அபிராமி என்கிற திருநங்கை கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் திடீர் திருப்பமாக, நண்பர்களே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


"விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அபி என்கிற அபிராமி 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வந்து அய்யங்கோவில்பட்டு பகுதியில் திருநங்கைகளோடு தங்கினார். பின்னர் புனிதா என்ற திருநங்கையின் சகோதரர் தங்கதுரையை திருமணம் செய்துகொண்டு, அவரிடமிருந்து நிறைய பணம்பெற்று விருத்தாசலத்தில் இரண்டுமாடி வீடு கட்டியிருக்கிறார். இதனால், புனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அபிராமி மீது கோபத்தில் இருந்தனர்.

  transgender



அதேபோல், மதுமதி, சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் ஆகியோரின் வீடுகளில் வேலைக்கு செல்ல மறுத்தும், அப்பகுதியின் தலைவி போல் இருந்ததாலும் அபிராமி மீது அவர்களும் கோபத்தில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிராமியைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி, பாலியல் தொழிலுக்காக சென்ற புனிதா, கயல்விழி, மதுமிதா ஆகியோர் தங்களுடன் வந்திருந்த அபிராமியின் முடியைப் பிடித்து இழுத்து நிலைகுலையச் செய்தனர். அப்போது, மறைந் திருந்த வீரபாண்டியன், சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் அபிராமியின் தலையில் இரும்புக்கம்பியால் தாக்கி கொலைசெய்துவிட்டு, பின்னர் நாடகமாடியது அம்பலமானது''’என்று விவரித்தார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.

 

meeting



விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் லட்சக்கணக்கான திருநங்கைகள் வருகின்றனர். அவர்களில் பலர் விழுப்புரத்திலேயே நிரந்தரமாக தங்குகின்றனர். அவர்களுக்காகவே அய்யங்கோவில்பட்டு பகுதியில் வீடுகள் கட்டி, ரேஷன் அட்டை வழங்கியுள்ளது அரசு. இதன்மூலம், பல திருநங்கைகள் அருகாமை கடைகளிலும், சுயமாக தொழில் செய்தும் கவுரமாக வாழ்கின்றனர். இருந்தும் பல திருநங்கைகள் இரவுநேரங்களில் சாலையோரத்தில் நின்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற சூழலில்தான் அபிராமி கொல்லப்பட்டார். இதையடுத்து, எஸ்.பி. ஜெயக்குமாரின் ஆலோசனையின்படி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் ரேவதி, நகரில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளை அழைத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினார்.


அதில், "திருநங்கைகள் சுயதொழில் செய்யலாம். வணிக நிறுவனங்களில் வேலைசெய்து கவுரமாக வாழலாம். அதைவிடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது சமூகத்துக்கும், உயிருக்குமே ஆபத்தை விளைவிக்கிறது. உயிர்தான் முக்கியம். இந்த அறிவுறுத்தலையும் மீறி பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்கு பதிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அறிவுரை வழங்கி அனுப்பினார் ஆய்வாளர் ரேவதி. தவறு செய்யும் திருநங்கைகள் தங்கள் உயிரின் மேன்மையை உணர்ந்து திருந்துவார்களா?
 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.