Skip to main content

நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த...தலைமை மீது கொந்தளிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சமீபத்தில் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டு போராடினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும், தி.நகர் எம்.எல்.ஏ.வுமான சத்யா... எழுநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வகித்து வந்த பதவிகளை ஒரே இரவில் மாற்றி உத்தரவிட்டார். அதில் பலர் எம்.ஜி.ஆர். காலத்து கட்சிக்காரர்கள். அவர்கள் பதறினார் கள். கதறினார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பலர் வீடுகளுக்கும் படையெடுத்தார்கள். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தை முற்றுகையிட் டார்கள். அவர்களில் நான்குபேர் தீக்குளிக்கவே முயன்றார்கள். மா.செ. சத்யா செய்த அத்துமீறல்களை வெளிப்படையாகவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 

admk



மறுபடியும் தலைமைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள். இந்தமுறை தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு ""நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்'' என எச்சரித்தது. நொந்துபோன அவர்கள் தலைமை நிலைய அலுவலரான மகாலிங்கத்திடம் மனு கொடுத்துவிட்டு "சத்யா ஒழிக' என கோஷமிட்டுவிட்டுச் சென்றார்கள். நீண்டகால அ.தி.மு.க.வினரின் பதவியைப் பிடுங்கும் சத்யாவின் தெம்புக்கு காரணம், முதல்வர் எடப்பாடிக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவர் நெருக்கமாக இருப்பதுதான் என வருத்தப்படுகிறார்கள் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

admk



சத்யா சென்னை மாநகராட்சியில் செல்வாக்காக இருக்கிறார். சென்னை நகரம் முழுக்க சூதாட்ட விடுதிகள், மசாஜ் கிளப்புகள் நடத்து பவர்களுக்குத் துணையாக நிற்கிறார். அவருக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் துணையாக நிற்க அமைச்சர் வேலுமணி உதவி செய்கிறார். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எடப்பாடியிடம் மட்டுமின்றி, டெல்லியில் மோடிவரை செல்வாக்குடன் உள்ளனர். இந்த அதிகார செட்-அப் பில்தான் அ.தி.மு.க. இயங்குகிறது. அதனால் அ.தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் லகானை தன் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.


ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார் எடப்பாடி. ஒரு எம்.எல்.ஏ. கூட இன்று ஓ.பி.எஸ். வசம் இல்லை. அமைச்சர் மணிகண்டனின் பதவியை எடப்பாடி பறித்ததுகூட ஓ.பி.எஸ்.ஸுக்கு விடப்பட்ட எச்ச ரிக்கையே. எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.ஸை அவைத் தலைவராக்கிவிட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி வருவதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவை நீக்குவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு கூடிய பொதுக்குழுவையும் செயற்குழுவையும் தேர்தல் கமிஷன் உதவியோடு கூட்டாமலிருக்கிறார்'' விவரிக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

"அதேநேரத்தில் எடப்பாடி இடத்தைப் பிடிக்கவும், தன்னிச்சையாக செயல்படவும் சீனியர் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு டெல்லி துணையும் இருக்கிறது. இது ஈகோ போட்டியாக மாறுகிறது. வேலுமணி, மழைநீரைப் பற்றி டி.வி. விளம்பரத்தில் வந்தவுடன் எடப்பாடி யும் அதேபோல் வீடியோ வெளியிட்டார். மின்துறை விவகாரங்களில் எடப்பாடிக்கு அனுமதி இல்லை. அதேபோல் உள்ளாட்சித் துறையில் எடப் பாடி நுழையவே முடியாது. செங்கோட்டையனின் கல்வி, விஜயபாஸ்கரின் சுகாதாரம் போன்றவை முதல்வர் நுழைய முடியாத துறைகள்' என உள்ளே நடக்கும் மோதல்களையும் சொல்கிறார்கள். 
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.