நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்து பின்னர் படிபடியாக சினிமாத் துறைக்குள் நுழைந்து தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தொகுப்பாளராக பணிபுரிவதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததாக சிவா சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த வருடம் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன், கடந்த 2011ஆம் ஆண்டில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்றொரு படத்தை இயக்கினார். அந்த படம் பாதியிலேயே ட்ராபானது. அந்த படத்தில்தான் நெல்சனுக்கு உதவி இயக்குனராக சிவகார்த்திகேயன் பணி புரிந்துள்ளார். சிவாவின் நண்பரும் பிரபல பாடகர், பாடலாசிரியர், இப்போது இயக்குனர் என்று அனைத்து துறைகளிலும் ஹிட் அடிக்கும் அருண் ராஜாகாமராஜும் இவருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் தானாம்.
இதனால்தான் சிவா தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் வரும் கிரிக்கெட் கற்றுத்தரும் கதாபாத்திரத்திற்கு நெல்சன் என்று பெயர் வைக்க காரணம் அதுதான் என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.
Show comments