ADVERTISEMENT

அடுத்தடுத்த அறிவிப்புகள்... சமரசமின்றி தயாராகும் சமந்தா படம்

02:37 PM Dec 27, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா 'யசோதா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக நடிக்கிறார்.

இந்நிலையில், யசோதா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில்," தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எந்த ஒரு சமரசமின்றி தயாரித்து வருகிறோம். முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த நாங்கள் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பை ஜனவரி 3ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரையும், இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஜனவரி 20ஆம் தேதிமுதல் மார்ச் 31 ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிட்டுள்ளோம் "எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT