ADVERTISEMENT
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரவு-பகல் என ஒரே கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். படம் பற்றி பேசிய இயக்குநர் தமிழ், “நம் நாட்டில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி, சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments