'தமிழ்ப்படம்' வெற்றிக்கு பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கி சிவா - ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் 'தமிழ்ப்படம் 2' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் நம்முடன் பேசியபோது...
ADVERTISEMENT
ADVERTISEMENT
"முதன்முதலில் பெண்குழந்தைகளை கள்ளி பால் ஊற்றி கொன்றுவிடும் வழக்கத்தை மாற்றி ஆண் குழந்தைக்கு கள்ளி பால் ஊற்றும் வழக்கம் நம் ஊரில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஆரம்பித்ததுதான் தமிழ்ப்படம். தற்சமயத்திற்கு போதுமான அளவு ஸ்பூப் படம் செய்து விட்டேன் என நினைக்கிறேன். அதனால் இன்னும் 2 அல்லது 3 வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் ஸ்பூப் படத்தை பற்றி நினைக்கலாம். என் இரண்டாவது படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று நம்புகிறேன். இது கண்டிப்பாக சீரியஸான படம். இன்னும் சில சீரியஸ் கதைகள் கொண்ட ஸ்கிரிப்ட்கள் என்னிடம் உள்ளது. அதையெல்லாம் அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம்" என்றார்.
மேலும் சி.எஸ். அமுதன் குறித்த தகவல்களுக்கு கீழு உள்ள வீடியோவை பார்க்கவும்....
Show comments