ADVERTISEMENT

'தலைவர் 169' படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிரபலம்

07:01 PM Jun 09, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினிகாந்த், கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனை அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. மேலும் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. சிவ ராஜ்குமார் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனை உறுதி படுத்தியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "ரஜிகாந்த்துடன் இணைந்து நடிப்பதை அனைவருமே சிறந்த வாய்ப்பாகக் கருதுவார்கள், எனக்கு அந்த வாய்ப்பு இந்த படத்தில் சாத்தியமாகியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ரஜினி என்னைச் சிறுவயதிலிருந்தே அறிவார். மூத்த நடிகருடன் நான் ஒரு சிறப்பான நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. ரஜினி சாரையும் என்னையும் சேர்த்து வெள்ளித்திரையில் பார்ப்பதை ரசிகர்கள் நிச்சியம் விரும்புவார்கள்.

'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிவ ராஜ்குமார் அந்த பேட்டியில், " ரஜினி சாருடன் நான் நடிக்கும் காட்சி செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு பெங்களூரு அல்லது மைசூரில் படமாக்கப்படும்" எனவும் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT