ADVERTISEMENT

தூண்டிய வனிதா... பொங்கிய மது... மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பூகம்பம்!

12:28 PM Aug 14, 2019 | santhoshkumar

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமினேஷனில் இருந்த சாக்‌ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கெஸ்ட்டாக வனிதா உள்ளே வந்து பார்வையாளர்கள் முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை அதிர்ச்சியை கொடுத்தார். உள்ளே வந்தவுடன் வழக்கம்போல தன்னுடைய அதிகாரத்தை ஒவ்வொரு போட்டியாளர் மேலும் காட்ட தொடங்கினார்.

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அபிராமி, முகின் இருவரின் பிரச்சனை பெரும் பிரச்சனையாக போய்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், கவினை பார்த்து உன்னை போல நான்கு பெண்களை நான் யூஸ் செய்ததில்லை என்று மது சொல்ல, மற்ற ஹவுஸ்மேட்ஸ் கவினுக்கு சப்போர்ட்டாக வருகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த லாஸ்லியா மதுவிடம் வார்னிங் செய்கிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT