Skip to main content

அபிராமியை அடிக்க சேரை ஓங்கிய முகென்...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது.
 

mugen

 

 

நாமினேஷனில் இருந்த சாக்‌ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கெஸ்ட்டாக வனிதா உள்ளே வந்து பார்வையாளர்கள் முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை அதிர்ச்சியை கொடுத்தார். உள்ளே வந்தவுடன் வழக்கம்போல தன்னுடைய அதிகாரத்தை ஒவ்வொரு போட்டியாளர் மேலும் காட்ட தொடங்கினார்.

 
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அபிராமியிடம் முகேன் பற்றின பெர்ஸனல் விஷயங்களை சொல்லிக்கொண்டு அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார். “அவன் ஹீரோ ஆகிட்டான், நீ ஜீரோ ஆகிட்ட” என்று அபிராமியிடம் முகேன் பற்றி கூறிவருகிறார்.
 

இதனையடுத்து வெளியான புரோமோவில், முகென் மற்றும் அபிராமி இருவருடைய பாஞ்சாயத்து என்ன என்பதை தீர விசாரிக்க அனைத்து ஹவுஸ்மேட்ஸும் சூழ்ந்து உட்கார்ந்து இருக்கின்றனர். அதன்பின் அபிராமி, ‘நான் அர்த்ததில்லா பண்ணேன்’ என்று ஹைபர் ஆகிறார். திடீரென கோபப்படும் குணாதிசியத்தை கொண்ட முகென், உட்கார்ந்திருக்கும் சேரை தூக்குகிறார். மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவரை சமாதானம் செய்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் இணைந்த 'வேலன்' பட கூட்டணி

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

mugen rao next movie update

 

மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்து, அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'வேலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் வெற்றி, மதில் மேல் காதல் என சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. 

 

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது முறையாக மீண்டும் 'வேலன்' பட இயக்குநரான கவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.மணிக்கண்ணன் தயாரிக்க இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

 

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'டாடா' பட இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

வளர்ந்து வரும் நடிகர்களுடன்  கைகோர்த்த இயக்குநர் ராஜேஷ் 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

shanthanu and mugen joins diretor rajesh web series

 

தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே இயக்குநர் ராஜேஷ் நடிகர் சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் இணைய தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் நடிக்க, சக்தி பஞ்சு சுப்பு, லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் பணிகள் தொங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.