Skip to main content

பிக் பாஸ்-3ன் அதிரடி மாற்றங்கள்! எதிர்பாராத விலகலும் சர்ச்சையும்! 

Published on 20/06/2019 | Edited on 20/06/2019


உலகளவில் புகழ் பெற்ற பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் இந்தியை தொடர்ந்து எண்டாமேல் நிறுவனம் கடந்த 2017 ல் தமிழிலும் 2018 ல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது . பிக் பாஸ் முதல் சீசனை போல கடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் எதிர்பார்த்த அளவு மக்களிடம் ஆதரவு கிடைக்க வில்லை. அதற்கு காரணம்,  சீசன் ஒன்றில் இருந்ததை போல பெரிய அளவு சுவாரசியம் எதுவுமில்லை.  இதனால் சீசன் ஒன் மற்றும் சீசன் இரண்டுக்கு ஸ்பான்சர் செய்த வீவோ மொபைல்ஸ் சீசன் மூன்றுக்கு ஸ்பான்சர் செய்ய போவதில்லை என்று நம் நக்கீரனிலே செய்தியில் கூறியிருந்தோம்.

 

k

 

அதைப்போல விவோ மொபைல்ஸ் விலகிகொண்டது.  இந்தநிலையில் ஒரு வழியாக நாடாளுமன்றம்  தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்படுவிட்டது.  சீசன் டூ போல இல்லாமல் சுவாரசியம் அதிகரிக்க செட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.   அதே போல கடந்த முறையை விட செட் மிகபெரிய பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

 

b

 

கடந்த முறை ஐஸ்வரியா தத்தா,  புகைபிடிக்கும் அறையில் புலம்பியது மற்றும் அதில் சில தவறுகளும் நடந்ததாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியது. அதை தவிர்க்கும் விதமாக இந்தமுறை புகைபிடிக்கும் அறையின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட சிறை போன்ற அறையில் கழிவறையில்லாத காரணத்தால் சில பிரச்சனை எழுந்தது.  இந்த முறை சிறையில் கழிவறை அமைத்துள்ளனர்.   அதே போல தண்ணீர் பிரச்சனை, இயற்கையை பாதுகாப்பது போல  அக்கறையுள்ள விதமாகவும் சில செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.  

 

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க பிக் பாஸ் சீசன் டூ’வில் நண்பர்கள் ஆன மும்தாஜ், ஜனனிஐயர், ரம்யா என்.எஸ்.கே, மமதி மற்றும் சாரிக் அனைவரும் ஒன்று கூடி ஒரு தனியார் ரெசார்ட்டில் கேக் வெட்டி  பிக் பாஸ் சீசன் டூ முடிந்து ஓர் ஆண்டு ஆனதை நினைவூட்டி கொண்டாடினர். இதில் இன்னொரு பிரிவாக யாசிகாஆனந்தும், ஜனனிஐயர் ஆகியோர் நட்சத்திர ஓட்டலில் இருவரும் கேக் வெட்டி, பெல்லி நடனமாடி கவர்ச்சியாக கொண்டாடினர். 

 

 இந்த முறை போட்டியாளர்கள் யார் யார் என்பது பார்வையாளர்களின் தேடலாக உள்ளது.  அதில் சிலர் நகைச்சுவை நடிகையான ஜாங்கிரி மதுமிதா ( ஓகே.ஓ.கே படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வருபவர் ),கர்னாடக இசை பாடகர் மோகன் வைத்யா, ஆல்யாமானசா, கஸ்தூரி, ராதாரவி, பிரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, ஸ்ரீமன், சாந்தினி, விசித்திரா, வி.ஜே.ரம்யா, பூனம்கபூர், ரமேஷ்திலக், சரண்சக்தி,கிருஷ், வனிதா ஆகியோர் லிஸ்டில் வருகின்றனர். 

 

 நிகழ்ச்சி துவங்கும்முன் சர்ச்சையுடன் பிரச்சனையும் துவங்கிவிட்டது.  " ஆமாம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சுதன் என்பவர் பிக் பாஸ் சீசன் த்ரீ நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு செய்துள்ளார். அதில்,  இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்கிறார்கள். அதில் பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஆபாசமாகவும், கவர்ச்சி உடை அணிவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன் இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசன் தணிக்கை செய்தபின் ஒளிபரப்ப வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 

Next Story

"நம்புங்க... நானும் நல்லவன்தான்" - குறும்பு குறையாத பாலாஜி!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
biggboss 4 balaji

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே (இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். இறுதிப்போட்டி வரை நின்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

 

உடலை கட்டுக்கோப்பாய் பராமரித்து வரும் பாலாஜி, பிக்பாஸுக்கு முன்பே சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்போது கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்தப் போட்டியில் கிடைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் பாலாஜி சற்று வித்தியாசமானவரும்  அதிரடியானவரும் ஆவார். ஆரம்பத்தில் இருந்தே அவரது வெளிப்படையான பேச்சும் அதிரடியான நடவடிக்கைகளும் பல பிரச்னைகளை உண்டாக்கின. சில நேரங்களில் உடைந்து கலங்கியும் இருக்கிறார்.

 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பலவீனமானவராக பார்க்கப்பட்ட பாலாஜி, நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்களிலும் நடத்தப்படும் போட்டிகளிலும் சிறப்பான வியூகம் அமைத்து தொடர்ந்து விளையாடி வந்தார். பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஒரு பக்கம் விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சாராரிடம் வரவேற்பையும் பெற்றது. இவரது நடவடிக்கையை பார்த்து சில வாரங்களிலேயே வெளியேறிவிடுவார் என்று தான் நினைத்ததாக கமலே கூறியிருந்தார்.

 

இப்படியாக இறுதிச் சுற்று வரை வந்து இரண்டாம் இடம் பெற்ற பாலாஜி, மேடையில் பேசும்போது "நான் எனக்கு தோணுனதை எல்லாம் பேசியிருக்கேன், செஞ்சுருக்கேன். கொஞ்சம் கூட எதையும் மறைக்கல. இப்படி இருந்தா ஜெயிப்போம்னு நினைச்செல்லாம் பண்ணல. விளைவுகளை பற்றி கவலைப்படாம செஞ்சிருக்கேன். ஆனா, அப்படி செஞ்சதோட விளைவா நான் இறுதிப் போட்டிக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லாவே செஞ்சிருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "ஆனா ஒன்னு... என்னை நம்புங்க, நானும் நல்லவன்தான்" என்று தனது குறும்பு மாறாமல் கலகலப்பாக முடித்தார்.