Skip to main content

விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து ஆபத்தான பயணம்... நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்த இருவர்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Afghanistan kabul airport peoples us airforce flight

 

இந்த நிலையில், ஆப்கானை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் நகரப் பேருந்துகளுக்கு முண்டியடிப்பது போல் பலர் விமானத்தில் ஏற முயற்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சில சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் வெளியான ஒரு வீடியோவில், விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற இருவர் நடுவானிலிருந்து கீழே விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

காபூலில் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க முடியாத மக்கள் விமானத்தைப் பின் தொடர்ந்தனர். இதில், இருவர் விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த இருவர், வானிலிருந்து கீழ் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உலக மக்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. 

 

Afghanistan kabul airport peoples us airforce flight

 

இதே போன்று, மற்றொரு விமானத்தின் மீது பேருந்தில் அமர்வது போல் விமானத்தின் மேல் கூரையில் மக்கள் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலைநகரில் உள்ள காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உலக நாடுகளின் பார்வை ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ள போதும், தங்களைக் காக்க எந்த நாட்டினராவது உதவ மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆப்கான் மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.