ADVERTISEMENT

நடுசாலையில் பெண் வெட்டி படுகொலை - வெங்கனூரில் பரபரப்பு

11:04 AM Dec 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் அருகே பட்டப்பகலில் பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவரின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், ராமகிருஷ்ணன் என்ற நபரை இரண்டாக திருமணம் செய்து ராசாத்தி வாழ்ந்து வந்தார். அவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனிமையில் வசித்து வந்த ராசாத்தி கூலி வேலைகளுக்கு சென்று வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், வயல் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் பொழுது சில மர்ம நபர்கள் சாலையிலேயே ராசாத்தியை வெட்டிப் படுகொலை செய்தனர். இது தொடர்பாக போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நாகராஜ் என்ற நபரை கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து, அது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT