Skip to main content

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்... ஒருவர் கைது, இருவர் தலைமறைவு!!

Published on 03/07/2020 | Edited on 04/07/2020
incident in ariyalur... One arrested, two hiding !!

 

அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்துவருபவர் மணிவண்ணன். இவர் பணி முடிந்தது வரும்போது, முட்டுவாஞ்சேரி என்ற ஊர் அருகே 3 பேர் கொண்ட கும்பல் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்ததில் அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், சதீஷ், ராம்கி ஆகிய மூன்று பேர் மணிவண்ணனை தாக்கியுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சதீக்ஷை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரும் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணையில் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் சந்திரசேகர் தாயாரை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான புகாரில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தவர் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அவரிடம் தனது தாயார் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று சந்திரசேகர் முயற்சி செய்துள்ளார். சந்திரசேகர் சொல்லியதை மீறி சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் மணிவண்ணன் மீது சந்திரசேகர் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று  மணிவண்ணன் காவல்நிலையத்தில் பணி  முடிந்து சிந்தாமணிக்கு (அவரது சொந்த ஊர் சிந்தாமணி) வரும்போது முட்டுவாஞ்சேரி அருகே டூவீலரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சந்திரசேகர், சதீஷ், ராம்கி ஆகிய மூவரும் அந்த வழியே வந்துள்ளனர். மணிவண்ணனை பார்த்த சந்திரசேகர் அவரிடம் சென்று என் தாயார் மீது வேண்டுமென்றே வழக்குப்பதிவு செய்தது ஏன் என்று கேட்டுள்ளார். அதனால் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கும், சந்திரசேகருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது  சந்திரசேகர், சதீஷ், ராம்கி ஆகிய மூவரும் சேர்ந்து மணிவண்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில்  மணிவண்ணன் நடக்க முடியாத அளவுக்கு  காயமடைந்துள்ளார். இதற்குள் அக்கம் பக்கத்தினர் அவ்வழியே வர மூவரும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தெரிய வரவே அவர்கள் மணிவண்ணனை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை செய்துள்ளார். சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் இருவரும் தூரத்து உறவு முறை என்று கூறுகின்றனர். இது சம்பந்தமாக விக்கிரமங்கலம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.