Skip to main content

கிராமங்களை மிரட்டும் நபர்... ஊரே திரண்டு புகார்!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

சண்டியர் போல் உள்ள அந்த நபரிடமிருந்து எங்களை காப்பாற்றுங்க... என ஊரே திரண்டு வந்து ஒரு நபர் மீது புகார் மனு கொடுத்தது ஆச்சரியமாகத்தான் இந்தது.

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலத்தையடுத்த கெஞ்சனூர், இக்கரை நெகமம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் ஒரு  மனு கொடுத்தார்கள்.

 

 Who threatens the villages ...

 

பிறகு அவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் நாங்கள் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தொடர்ந்து ஊரைச் சுற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த நிலையில் சென்ற 14 ம் தேதி எங்க ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அந்த இளைஞர் ஆட்டோவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதோடு ஆட்டோவை கல்லால் தாக்கி சேதப்படுத்திள்ளார்.

இது குறித்து ஒரு மக்கள் நாங்கள் அனைவரும் அவரிடம் நியாயம் கேட்க சென்ற போது அந்த நபர் எங்களையும் கேவலமாக தரக்குறைவாக பேசினார். எங்கள் வீடுகளிலும் கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.  அந்த நபரால் நாங்கள் துன்பப்படுகிறோம் ரவுடி போல எங்களை மிரட்டுகிறார்.  இரவு நேரங்களில் அச்சத்துடன்  இருக்கிறோம் எனவே சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் புகார் கொடுத்தோம் என்றனர். ஊருக்கு ஊர் ஏதோவொரு சண்டியர் இருக்கத்தானே செய்கிறார்கள்.

அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் வந்து ஒரு மனுவை கலெக்டரிடம்  கொடுத்தனர். அதில் அவர்கள். "கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு குத்தகைதாரர் இரட்டை வரி வசூல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். குற்ற சம்பவத்தை தடுக்கும் வகையில் கொடிவேரி அணை பகுதியில்  அமைந்துள்ள புற காவல்நிலையத்தில் போலீசார் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும்.

பராமரிப்பு மற்றும் பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கோபுரத்தை பராமரித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். பெண்களுக்கு உடைமாற்றும் அறை அமைத்து தரவேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கைகள்   மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்