Skip to main content

நாங்களும் மனிதர்கள் தான் பாராட்டு விழாவில் கண்ணீர் விட்ட திருநங்கைகள்!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

மனித சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளை உடன் பிறப்புகளாக கருதாமல் கேலிப்பொருளாகவும், பாலியல் பொருளாகவும் பார்த்து வரும் இந்த நாட்டில், அவர்களில் சாதனை படைத்து மற்றவர்களையும், சாதனையாளர்களாக மாற்றி வரும் திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தி பதக்கங்களையும் வழங்கியிருக்கிறது கலைத்தாய் அறக்கட்டளை.
 

நாகை மாவட்டம் மங்கைநல்லூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் 'கலைத்தாய் அறக்கட்டளை' பல்வேறு வகையில் நலிந்துவரும் கலைகளையும், கலைஞர்களையும் மீட்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும், விளிம்பு நிலையில் உள்ள கலைஞர்களை மீட்டெடுக்கும் பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. திருநங்கைகளில் சாதித்து தனித்துவமாக விளங்கி வருபவர்களை அழைத்து அவர்களை பாராட்டி கௌரவித்து பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.

We humans are just praise  Transgender people in tears at ceremony


மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு அறங்கத்தில் நடந்த இந்த விழாவில் மயிலாடுதுறை, சீர்காழி, ஆகிய தாலுக்கா தாசில்தார்களும், பல்வேறு நகர, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சான்றோர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொரு தளத்திலும் சாதித்து வரும் 20- க்கும் மேற்பட்ட சாதனை திருநங்கைகள் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர்.
 

பாராட்டு விழாவை நடத்திய கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனர் கிங் பைசல் கூறுகையில்," நான் பிறந்தது இஸ்லாமிய சமூகம் என்றாலும், பாரம்பரியமிக்க கலைகளின் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம். அதனுடைய வெளிப்பாடு பள்ளிப்பருவத்திலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நாடகங்களின் மேடையேறி நடிப்பதும். சிவன் வேடமணிந்து நடிப்பதுமாக இருந்தது. இன்று படிப்படியாக வளர்ந்து பல்வேறு விருதுகளையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வளர்ந்திருக்கிறேன். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் சிவன் வேடம் அனிந்தார். அதற்கு பிறகு நான் தான் என பலரும் கூறுவார்கள். அந்த புகழோடு இன்றும் கலைத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
 

நான் சிவனாக நடித்தாலும் பெண் வேடம் இடுபவர்கள் எல்லோருமே திருநங்கைகளாக இருப்பார்கள். எனது குழுவில் பெண் வேடமிடும் அத்தனை பேருமே திருநங்கைகள் தான். ஒருவகையில் அவர்களுக்கு வாழ்வு அளிக்கிறோம் என்பதைத் தாண்டி, அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்கிற சமூக சிந்தனை தான். அதனுடைய உந்துதல்தான் தமிழகம் முழுவதும் பல்வேறு தளங்களில் சாதனை படைத்து சாதித்துவரும் திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தி மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்தேன். அதன்படி அழைத்து அனைவரையும் கவுரவித்திருக்கிறேன். தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளை அழைத்து பாராட்டு விழா நடத்தியது இதுவே முதல்முறை." என்கிறார் உற்சாகத்துடன்.
 

We humans are just praise  Transgender people in tears at ceremony

பாராட்டுகளைப் பெற்ற திருநங்கைகளோ," எங்களுக்கு என்று உறவுகள் எதுவுமில்லை, எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம், எங்கிருந்தோ வந்தவர்கள் எங்களோடு உறவாக தாயாக பிள்ளையாக ஒன்றாக இருக்கிறோம், நாங்களும் மனிதர்கள்தான் என்பதை எங்களால் முடிந்தவரை மனித சமூகத்திற்கு உணர்த்தி வருகிறோம். எங்களை பெற்றவர்களை எங்களை மனிதர்களாக பார்க்கவில்லை என்றால், இந்த சமூகம் எப்படி பார்க்கும். எங்களை அழைத்து பாராட்டு விழா நடத்திய கலைத்தாய் அறக்கட்டளைக்கு நாங்கள் என்று கடமைப்பட்டுள்ளோம்," என்றனர் பலரும்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.