Skip to main content

வங்கிக்குள் நுழைந்து ரூபாய் 50 ஆயிரம் திருடிய பெண்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. கணவனை இழந்த இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்தை தனது பெயரில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்துவதற்காக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கனரா வங்கிற்கு வந்துள்ளார்.
 

அந்த வங்கி கிளையில் 50,000 ரூபாயை கட்டிவிட்டு மீதி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பையில் வைத்திருந்துள்ளார். கனரா வங்கியில் பணம் கட்டியதை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் தானியாங்கி மிஷினில் பதிவிடுவதற்காக வங்கியில் உள்ள இயந்திரம் முன் வரிசையில் நின்றுள்ளார்.

vellore district ambur vanara bank branch lady thief  police



சிறிது நேரம் பொறுத்து தனது பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த பணம் 50 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கேயே அழுது புலம்பியவர். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வங்கி வளாகத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் விசாரித்தபோது, 50 ஆயிரம் ரூபாய் இந்தியன் வங்கியில் தனது பெயரில் உள்ள கணக்கில் கட்டுவதற்காக வைத்திருந்ததாக கூறியுள்ளார். பின்னர் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். 
 

அதில் வங்கி கணக்கு புத்தகம் அச்சிடும் இயந்திரம் முன் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த விஜயாவின் பின்புறம் ஓர் பெண் வந்து நின்று கொண்டு சுற்றும் பார்த்து, எவருக்கும் தெரியாத வகையில் விஜயா வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ள காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து ஆம்பூர்  நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பணம் கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

 

கடந்த 16.09.2019 ஆம் தேதி இதே வங்கியின் முன் இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்த வந்த பெண்ணை திசை திருப்பி நூதன முறையில் 35 சவரன் நகை மற்றும் 45 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது வங்கிக்குள்ளேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது வங்கி நிர்வாகத்தை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும், அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.