ADVERTISEMENT

தடுப்பூசி தட்டுப்பாடு; ஏமாற்றத்தில் திரும்பிய மக்கள்!! (படங்கள்)

04:42 PM Jun 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கரோனா தொற்று பரவலால் அனைத்துத்தரப்பட்ட மக்களும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அந்த வகையில் கரோனாவில் இருந்து மீண்டு முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு அனைவரும் விரைவாக திரும்ப வேண்டும் என்ற நோக்கில் அரசு மற்றும் மருத்துவர்கள் தரப்பில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் சமீப காலமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வந்துள்ள நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பல மையங்களில் தடுப்பூசி இல்லாத காரணத்தால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதே போல் கோடம்பாக்கம் என்.எஸ்.கே சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் போட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் முகாம் மூடப்பட்டுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT