ADVERTISEMENT
ADVERTISEMENT
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பூ ஏற்றி வந்த ஆட்டோ மீது லாரி ஒன்று மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பூசாரிபட்டியில் இருந்து குமாரபாளையத்தை நோக்கி மூன்று சக்கர ஆட்டோ ஒன்று பூ ஏற்றிக்கொண்டு பச்சாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு லாரி ஆட்டோ மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்து சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மயில்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் உதவிக்கு சென்ற செல்வராணி பலத்த காயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Show comments