ADVERTISEMENT

சிக்கிய கடிதம்... இளம்பெண் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை!

05:37 PM Oct 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. கணவரைப் பிரிந்து வாழும் இவருக்கு 4 மகள், ஒரு மகன் உள்ளார். 3 வது மகள் கவிதா (வயது 19), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் மாலையிலிருந்து காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கவிதா கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனிதா தனது மகளைக் காணவில்லை என துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்க சென்றார். அதனையடுத்து இளம்பெண் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரில் சென்று அந்தப் பெண் சவிதா என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த இளம்பெண் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT