Skip to main content

உயிருக்கு பயந்து கலெக்டரிடம் கெஞ்சிய ஆர்.ஐ.!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

திருச்சியில் மணல் கடத்தல் பிரச்சனை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல், கொலை முயற்சி தாக்கல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பது அரசு அலுவலர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 
 

திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.ஐ. வருவாய் ஆய்வலாளராக யோகராஜன். இவர் வெளியூரிலிருந்து இங்கு பணிக்கு வந்தவர். இவருக்கு கூத்தைப்பார் வேங்கூர் செல்லும் வழியில் பத்தாலைபேட்டை என்கிற இடத்தில் அலுவலகத்துடன் கூடிய குவாட்ஸ் அரசாங்க சார்பில் கொடுத்திருக்கிறார்கள். 

 

 


இதனால் இவர் இங்கு தான் தங்கி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவருடைய அறையில் தூங்க செல்லும் போது இவருடைய குவாட்ஸ் பின்புபுறம் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று போய் பார்த்த போது அங்கே இரண்டு மூன்று பேர் தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆர்.ஐ. இது குடியிருக்கிற இடம் இங்கே வந்து குடிக்கலமா சத்தம் போட்டிருக்கிறார். உடனே அவர்கள் என்ன ஆர்.ஐ.னா பெரிய கொம்பா என அசிங்கமாக பேசிக்கொண்டே கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து அவரை குத்த வந்திருக்கிறார்கள். இவர் பயந்து போய் அலறியடித்து அங்கியிந்து ஓடியிருக்கிறார்.  இவருடைய அலறல் சத்தம் கேட்டும் யாரும் அங்கே துணைக்கு வரவில்லை என்றவுடன் இவருக்கு இன்னும் பயம் அதிகமாகிவிட்டது. அடுத்த நாள் இதே போன்று அதே இடத்தில் கையில் அரிவாலுடன் நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள். உடனே இது குறித்து ஆர்.ஐ. யோகராஜ் திருவரம்பூர் இன்ஸ்பெக்டர் மதனிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஆனாலும் இவர் இது பற்றி விசாரிக்க கூடா இல்லையாம். 

 

Riyu who pleaded with the Collector for fear of life


 

இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்.ஐ. தன்னுடைய சங்கத்தின் மூலம் கலெக்டரிடம் சென்று அங்கு பணி செய்வது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தொடர்ந்து இதே போன்று மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கிறார்கள். என்று புகார் சொன்னவுடன் அதிர்ச்சியடைந்த கலெக்டர் உடனே எஸ்.பியிடம் பேசி அந்த இரண்டு பேரையும் ரிமாண்ட பண்ண சொல்லியிருக்கிறார். கலெக்டர் பக்கம் இருந்து பிரஷர் வந்தவுடன் உஷார் ஆனா இன்ஸ் மதன் குற்றவாளியான வெங்கடேஷன் மற்றும் முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது பண்ணுவதை கூட வெளியே சொல்லாமல் அவர்களை ஜாமீனில் தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 
 

 

 

காரணம் அவர் இரண்டு பேரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் இன்ஸ் மதன் பத்தாலைபேட்டை, வேங்கூர், திருவரம்பூர் ஆகிய பகுதிகள் மணல் கொள்ளை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருவரம்பூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக இன்ஸ்பெக்டராக இருப்பவர் மதன். இவர் மணல் கொள்ளையர்கள் என்றால் மாட்டுவண்டியில் மணல் எடுப்பவர்களே பிடித்து வழக்கு போட்டுக்கொண்டிருப்பார். ஆனால் லாரிகளில் மணல் கடத்துபவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பார் என்கிறார்கள் அந்த பகுதியில் விவரம் அறிந்தவர்கள். மக்களுக்காக வேலை செய்ய வேண்டிய ஆர்.ஐ.யே உயிருக்கு பயந்து கலெக்டரிடம் புகார் சொல்லி தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை என்றால் பொதுமக்களுக்கு காவல்நிலையில் கிடைக்கும் மரியாதையே உதாரணம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.