Police investigation incident in thiruchy musiri

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர் முசிறி தாலுக்கா காக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிஒருவரைபாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல்துறையினர், பிரசாந்த்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலைய மாடியில் வைத்து பிரசாந்த்திடம் காவல் துறையினர் நேற்றுமாலை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபிரசாந்த்,தப்பிக்க வழி இல்லாததால் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பிரசாந்த்தை காவல்துறையினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குமுதலுதவி அளிக்கபட்ட நிலையில்அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் இறுதியில்சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.

Advertisment

இவர் 10 வருடத்திற்கு முன்பு தொட்டியம் பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத்தகராறில் அந்தப் பெண்ணின் சகோதரரை, பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மணி ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் பெண்ணின் சகோதரர் இறந்துள்ளார். அந்த கொலை வழக்கில் பிரசாந்த்துக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தகவல் அறிந்தமத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் ஆகியோர் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.