Skip to main content

பிடிபட்ட பணத்திற்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை! அது எங்க பணமும் இல்லைங்க!! தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் அ.ம.மு.க'வினர் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் காவல்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அதிகாரிகளை கட்சியினர் தாக்க முற்பட்டனர்.

 

 

theni ammk candidate thangatamilselvan interview

 

அதிகாரிகளை பாதுகாக்க, தற்காப்பிற்காக காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். இச்சம்பவத்தை அடுத்தை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளரான பொன்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழனி, செல்வம், சுமன் ராஜ், பிரகாஷ்ராஜ் உள்பட ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து 150 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், காவல்துறையின் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

இச்சம்பவம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

இந்தநிலையில் ஆண்டிபட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கதமிழ்ச்செல்வனோ.... 

 

நேற்றோடு பிரசாரம் முடிந்துவிட்டது. தேர்தல் பணிகளில்இருக்கிறோம். நேற்று நடந்த சம்பவத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கான தன்னிலை விளக்கம் கொடுக்கவே உங்களை சந்தித்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்த அவர் நேற்று கைப்பற்றப் பட்ட பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பணம் இருந்ததாக சொல்லப்படும் காம்ப்ளக்ஸ், அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமானது. அதில் எந்த முட்டாளும் பணத்தை வைக்கமாட்டான். இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம். வருமானவரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது. கைது செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு அப்ரூவர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்யும் போது, அடையாளம் தெரியாத 150 பேர் என குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தலின் போது பூத்களில் இருக்கும் எங்கள் ஆட்களைக் கைது செய்யக் கூட இது கடந்த 4 நாட்களாக தொகுதியில் உள்ள மக்களை வாக்காள மக்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 150 கோடிக்கு மேல் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு பணம் பட்டுவாடா செய்து இருக்கிறது. அதையெல்லாம் தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு இத்தொகுதியை பொருத்தவரை ஓபிஎஸ் கட்டுப்பாட்டில்தான் அனைவருமே சேயல்பட்டு வருகிறார்கள் எனக்கூறினார். 

 

இந்த பேட்டியின் போது ஆண்டிபட்டி சட்டமன்றத் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயக்குமார் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.