Skip to main content

போராட்டத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகள்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
 

காத்திருப்பு போராட்டத்தில் "மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தை அருதியிட்டு குறிப்பிட்ட தேதியில் காலைநேரத்தில் நடத்திட வேண்டும், இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் பாஸ், பஸ் பாஸ், பாதுகாவலர் பாஸ், உள்ளிட்டவைகளை வழங்கும் வகையில் மருத்துவர்களும் மற்ற அனைத்து துறை அதிகாரிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்திட வேண்டும். 
 

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் இந்திரா குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை மட்டுமே தந்து அதோடு முழுமையான ஊதியத்தையும் வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை வழங்கவேண்டும். வங்கி கடன் வழங்கும் போது வங்கி மேலாளர்கள் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் குறித்த நேரத்தில் கடன் வழங்க வேண்டும்," என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கலந்து கொண்டனர்.

tamilnadu disability kumbakonam rto office strike


நீண்ட நேரத்திற்கு பிறகு கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தைக்கு வரசொல்ல சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியரும் மாற்றுதிறனாளிகளிடம் வந்து அழைத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளோ, கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில் தான் போராடுகிறோம். அவர் இருக்கும் மேல் தளத்திற்கு வரமுடியாமல் தான் கீழே நின்று போராடுகிறோம். அவரு வந்து எங்க குறையை கேட்ககூடாதா என கூறி அனுப்பிவிட்டனர். ஆர்,டி,ஓவும் கீழே இறங்கி வந்து மனு வாங்க மறுத்துவிட்டார்.

 

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் மாநில துணைத் தலைவர் கணேசன் கூறுகையில், "சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டம் செய்தோம். 
 


அப்போது கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அழைத்ததின் பேரில் வந்தோம். ஆனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் தளத்தில் செயல்படுவதால் மாற்றுத்திறனாளிகள் அதிகாரியை சந்திக்க லிப்ட் வசதி சாய்வு தள பாதையோ எவ்வித வசதியும் இல்லாமல் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் கீழே இருப்பதாக குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த கோட்டாட்சியரை சந்தித்து பொறுப்பாளர்கள் கோரிக்கையை கொடுக்க கீழே இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் மாற்றுத்திறனாளிகளை அலட்சியப் படுத்தும் நோக்கில் அவர்கள் வரவேண்டாம் நீங்கள் என்ன என்று பேசுங்கள் எனஅலட்சியப்படுத்தும் நோக்கில் கீழே இறங்கி வர மனமில்லாமல் அவர்களை போகச் சொல்லுங்கள் உங்களிடம் பேசுகிறேன், என்று சொன்னார்.
 

அதற்கு ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தரை தளத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மனுக்களைப் பெற்று வரும் 22 ஆம் தேதி அனைத்து அலுவலர்களையும் சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்துள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.